பென்னாகரத்தில் ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது

Update: 2024-06-26 00:57 GMT

பென்னாகரத்தில் ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பசலி 1433-- ஜமாபந்தி நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள்,வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ), AD servey செந்தில்குமார்,பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ராஜசேகர், மற்றும் துணை வட்டாட்சியர்கள் , வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News