ஜன. 10 ந் தேதி சமூக நலத்துறை வாகனம் ஏலம்

ஜன. 10 ந் தேதி சமூக நலத்துறை வாகனம் ஏலம்

Update: 2023-12-19 17:15 GMT

ஜன. 10 ந் தேதி சமூக நலத்துறை வாகனம் ஏலம் - ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள அலுவலக ஈப்பு வருகின்ற 10.01.2024 அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் டெண்டர் மற்றும் பொது ஏலம் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள அலுவலக வாகனம் TN –28 G-0040 LMV Jeep வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 10.01.2024 அன்று காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் நுழைவுக்கட்டணம் ரூ.50/- மற்றும் முன் வைப்புத்தொகை ரூ.2500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நுாறு மட்டும்) District Social Welfare Officer, Namakkal என்ற முகவரியில் வங்கி வரைவோலையாக (Demant Draft) எடுத்து ஏலத்தில் பங்கேற்கலாம்.

அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடைபெறும். ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன் பிணைத் தொகை மீள வழங்கப்படும். இந்த ஏலத்தை ரத்து செய்வதற்கோ, ஏலத்தை நிறுத்தி வைக்கவோ, ஏலத்தை முடித்து வைப்பதற்கோ மாவட்ட சமூகநல அலுவலர் (பொ), நாமக்கல் அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. ஏலம் எடுப்பவர் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக ஏலம் கேட்கப்பட்ட ஏலதாரர் ஏலத்தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான GST 18 சதவீதம் தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். மேலும் வாகன ஏலத்தில் கலந்து கொள்ள அணுக வேண்டிய முகவரி, மாவட்ட சமூகநல அலுவலகம் அறை எண்.234, கூடுதல் கட்டிடம், முதல் தளம் மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல். தொலைபேசி எண், 04286-299460 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News