திருப்பூரில் மல்லிகைப்பூ ரூ. 800க்கு விற்பனை

திருப்பூரில் சுபமுகூர்த்த நாளையொட்டி மல்லிகை பூ ரூ. 800 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-05-19 13:02 GMT

பூக்கள் விலை

திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைவாக இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாளாக இருப்பதையொட்டி நேற்று பூக்களின் விலை அதிகரித்தது.குறிப்பாக மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில தினங்களாக ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ. 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லைப் ரூ. 600,சம்பங்கி ரூ. 200,சிவப்பு அரளி ரூ.300, சாதா அரளி ரூ. 240 செவ்வந்தி பூ ரூ. 240,பட்டன் ரோஜா ரூ.24 ரோஜா பூ கட்டு ரூ.300 ஆகிய விலையில் விற்கப்பட்டன. மாலை வேளையில் பூக்களின் விலை சற்று சரிவை கண்டது.
Tags:    

Similar News