மல்லிகை பூ விலை சரிவு

பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2024-04-08 14:21 GMT

பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பட்டி,குப்புச்சிபாளையம்,அண்ணாநகர்,குஞ்சாம்பாளையம்,ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயில் பயிர் செய்துள்ளர். அங்கு விளையும் பூக்களை பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.  கொண்டுவந்த பூக்களை பரமத்தி வேலூல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் வந்து ஏலம் கூரி வாங்கி செல்வது வழக்கம். இன்று நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் கிலோ ஒன்று மல்லிகை பூ 350-க்கும்,சம்பங்கி பூ 240-க்கும்,அரளி பூ- 220-க்கும்,ரோஸ் பூ 260-க்கும்,செவ்வந்தி பூ 280-க்கும், கனகாம்பரம் பூ 800-க்கும்,காக்கர்டான் பூ 600-க்கும்,முல்லை பூ 600-க்கும் ஏலம் போனது. கடந்த சில தினங்கலாக மல்லிகை பூ ரூ.450-க்கு மேல் விற்பனை ஆனது. தற்போது மல்லிகை பூ வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை சரிவடைந்துள்ளதால் மல்லிகை பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Tags:    

Similar News