ஜெயலலிதா நினைவு நாள்: அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி!

ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-12-05 08:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மெல்லுமண்டி தெருவில் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு புதுக்கோட்டை நெல்லு மண்டி தெருவில் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணியின் அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு கழகத்தின் மூத்த முன்னோடி புலவர். ராஜேந்திரன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சந்தானம், பொருளாளர் செழியன், வழக்கறிஞர் முத்தையன், நகர செயலாளர் மாரிமுத்து, கருப்பையா மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசன், மகளிர் அணிலதா, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் சரவணன், மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, வட்ட ,கழக ஊராட்சி செயலாளர்கள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு செல்வி ஜெ ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் 500 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News