ஜெயலலிதா பிறந்தநாள் - எடப்பாடியில் கோலப்போட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி நகராட்சி 29 வது வார்டு பகுதியில் கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2024-02-20 01:51 GMT

பரிசளிப்பு 

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டு கவுண்டம்பட்டி பகுதியில் எடப்பாடி நகர கழகச் செயலாளர் முருகன் தலைமையில் கோலப் போட்டி நடைபெற்றது இந்த கோலப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரவர் வாசலில் வண்ண கோலமிட்டு இருந்தனர்.

இதில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது பின்னர் கோலா போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பரிசு வழங்கும் விழாவில் எடப்பாடி நகர மன்ற உறுப்பினர் முருகன் மற்றும் எடப்பாடி நகர மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர் இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News