நகை திருட்டு

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவரின் வீட்டில் பூட்டை உடைத்து எட்டு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2023-12-22 11:25 GMT

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவரின் வீட்டில் பூட்டை உடைத்து எட்டு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு. திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகரை அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (42). இவர் இந்து முன்னணி அமைப்பின் அண்ணாநகர் பகுதி பொறுப்பாளராக உள்ளார். நேற்று காலை ரவி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள துணிமணிகள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த சங்கிலி, கொடி, கம்மல், தங்க நாணயம் உள்பட 8 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இதேபோல் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் பார்வையிட்டனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News