வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-11 08:22 GMT

காவல் நிலையம் 

 உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன்குளம் கிராமத்தில் ராஜாமணி வயது 72 என்ற பெண்ணின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு  ஏற்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News