கலைஞர் பிறந்தநாள்- திமுக மத்திய நகர இளைஞரணி சார்பில் அன்னதானம்

கரூரில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மத்திய நகர இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-06-03 15:34 GMT

கலைஞர் பிறந்தநாள்- திமுக மத்திய நகர இளைஞரணி சார்பில் அன்னதானம். தமிழக முன்னாள் முதலமைச்சர், மறைந்த கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழாவை, தமிழகமெங்கும் உள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மத்திய நகர இளைஞரணி சார்பில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு இன்று மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானமாக தக்காளி சாதம், தயிர்சாதம், ஊறுகாய், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏழை ,எளிய மக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்று சென்றனர். இந்த நிகழ்ச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மத்திய தொகுதி பொறுப்பாளர்கள் வி ஜி எஸ் குமார், மத்திய பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஜிம்.பாலாஜி,நகர பகுதி கழக செயலாளர் இந்தியன் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, கலைஞர் பிறந்த நாளில் அன்னதான விழாவை சிறப்பாக நடத்தினர்.

Tags:    

Similar News