செய்யாறில் கலைஞர் நூற்றாண்டு விழா
செய்யாறில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் எம் எல் ஏ ஓ ஜோதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி 16வது வார்டு பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி அண்ணாதுரை தலைமையில் தாங்கினார். திமுக நிர்வாகிகள் ராமு, காசிராஜன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி கலந்து கொண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் திருவத்திபுரம் நகராட்சியில் திருவோத்தூர் வேதபுரிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருவோத்தூர் ஆலய திருமண மண்டபம் 3.40 கோடி மதிப்பில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் சந்தை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
.16 வது வார்டு பகுதியில் மக்கள் கோரிக்கை ஏற்று நியாய விலை கடை கட்டி திறந்து வைக்கப்பட்டது என பேசினார். கலைஞர் நூற்றாண்டு விழாவில் 100 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு முதல் பரிசு டிவி, இரண்டாம் பரிசு செல்போன், மூன்றாவது பரிசு ஜாமன்டரி பாக்ஸ் ஆகியவை வழங்கினர், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை பரிசுகள் வழங்கினர். 6 மாணவர்களுக்கு சைக்கிள்கள் மற்றும் 2 நபர்களுக்கு இஸ்திரி பெட்டி, 20நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் சரஸ்வதி ரவி, செந்தில், கோவேந்தன், வர்த்தக அணி கோபு, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.