கலைஞர் நூற்றாண்டு நிறைவு கூட்டம்

கந்தர்வகோட்டையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-27 09:09 GMT

கலைஞர் நூற்றாண்டு விழா 

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் தேர்தல் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத், கருணாநிதியின் நூற்றாண்டு சாதனை என்ற தலைப்பில் பேசினார்.

கூட்டத்தில், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மா.கூட்டத்தில், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மா. தமிழய்யா, வடக்கு மாவட்ட மீனவரணி செயலாளர் எம். ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் மா. ராஜேந்திரன், குழ. பழனிவேல் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் எம். பரமசிவம் வரவேற்றார். நிறைவில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News