தேர்தல் பணியை துவங்கிய காளியம்மாள்

கும்பகோணம் அருகே உடையாளூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காளியம்மாள் தனது தோ்தல் பணியை தொடங்கினாா்.

Update: 2024-03-04 07:00 GMT

காளியம்மாள் 

மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக பி. காளியம்மாள் அறிவிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் சமாதி எனக் கூறப்படும் இடத்திலிருந்து தோ்தல் பணியை சனிக்கிழமை தொடங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் காளியம்மாள் தெரிவித்தது: நாங்கள் வெற்றி பெற்று இந்தத் தொகுதி மக்கள் முன்னேற்றத்துக்கு தேவையானவற்றை செய்து கொடுப்போம். மேலும், உடையாளூரில் ராஜராஜசோழனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கும், அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வோம். எங்களுக்கு எந்தச் சின்னம் வழங்கினாலும் 2 மணிநேரத்தில் அனைவருக்கும் பரப்பி விடுவோம் என்றாா் அவா். அப்போது, தஞ்சாவூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஹூமாயூன்கபீா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News