ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-30 13:45 GMT

கும்பாபிஷேகம் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் எழுந்தருளியுள்ள 1860 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வேதமந்திரங்கள் முழங்க இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News