அதிக கடனுதவி வழங்கிய வங்கி கிளைகளுக்கு ஆட்சியர் பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவி வழங்கிய வங்கிகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பாராட்டினார்.

Update: 2024-03-06 11:43 GMT

கேடயம் வழங்கல் 

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2022-23ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவி வழங்கிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான விருதினை இந்தியன் வங்கி கள்ளக்குறிச்சி கிளைக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கள்ளக்குறிச்சி கிளைக்கு இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருக்கோவிலுார் கிளைக்கு மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும்வழங்கப்பட்டது. மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள், வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News