கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் : பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-23 02:57 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 

 கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்த உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்தது இதனை மீறி திருவாரூர் ரயில் நிலையம் முன்பு பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Tags:    

Similar News