காமாட்சிபுரம் ஆதீனம் மறைவு - பொதுமக்கள் அஞ்சலி

காமாட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவையடுத்து ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-03-12 08:11 GMT

காமாட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 

கோவை.ஒண்டிப்புதூர் அடுத்து காமாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி சக்தி பீட ஆதினமாக இருந்து வந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நல குறைவு ஏற்பட்டது.இந்நிலையில் இன்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பூத உடல் இருகூரில் உள்ள ஆதீனத்திற்கு எடுத்துவரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆதீன வளாகத்தில் உள்ள பிரதான மண்டபத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடல் வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இருந்து மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது மக்களின் அஞ்சலிக்கு பிறகு நாளை அவரது உடல் ஆதீன வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.உள்ளூர் பொதுமக்கள் தற்போது சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News