கள்ளக்குறிச்சியில் கம்பன் கழக துவக்க விழா

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கம்பன் கழக துவக்க விழா நடந்தது.

Update: 2024-03-26 05:34 GMT

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கம்பன் கழக துவக்க விழா நடந்தது.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கம்பன் கழக துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்.எம்., ஹைடெக் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் சுலைமான் தலைமை தாங்கினார். வடக்கனந்தல் அரிமா சங்க முன்னாள் ஆளுனர் திருநாராயணன், ரிஷி நேத்ராலயா கண் மருத்துவர் செல்வரங்கம், டி.எஸ்.எம்., கல்விக்குழு தலைவர் மனோகர் குமார் முன்னிலை வகித்தனர்.

கம்பன் கழக பொதுச் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். துணைத்தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன், பொருளாளர் அம்பேத்கர், வழக்கறிஞர் ரங்கராஜன் வாழ்த்திப் பேசினார். திண்டிவனம் கம்பன் கழக பொதுச் செயலாளர் ஞானஜோதி சரவணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கம்பன் சிறப்புகள் குறித்து பேசினர். விழாவில் தமிழறிஞர்கள் புகழேந்தி, சிங்கார உதியன், லட்சுமிபதி, மலரடியான், கலைமகள் காயத்ரி, கஸ்துாரி இளையாழ்வார், அருள்ஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News