காஞ்சி மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் காந்தி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பழங்கள், பழரசங்கள் வழங்கப்பட்டது

Update: 2024-05-10 13:55 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு 

காஞ்சிபுரம் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் காந்தி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பழங்கள், பழரசங்கள் வழங்கப்பட்டது. தமிழக முழுதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர், இளநீர் உட்பட பல வகை குளிர்ச்சியான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில்,

காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் அதிகம் பொதுமக்கள் நடமாடும் இருக்கும் நிலையில் அவர்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கூழ், மோர், பழரசம் மற்றும் கீரைக்காய், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளும், சிறுவர்களுக்கு ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகளை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர்,

மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், உள்ளிட்டோர் வழங்கினர். தண்ணீர் பந்தலில் வழங்கப்படும் பொருட்களை பெற வழக்கம்போல் பொதுமக்கள் முட்டி மோதி சூறையாடியும், குளிர்பானங்களை பெற்றும் சென்றனர்.

Tags:    

Similar News