கந்த சஷ்டி : சங்கரநாராயணசாமி கோவிலில் திருக்கல்யாணம்

Update: 2023-11-20 01:42 GMT

திருக்கல்யாணம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்நிலையில் திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து நேற்று மதியம் தெய்வானை கோவிலில் இருந்து எழுந்தருளி வடக்கு ரத வீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்குரதவீதியில் உள்ள காட்சி கொடுக்கும் இடத்திற்கு எழுந்தருளினார். அப்போது சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News