கராத்தே மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

அரியலூரில் கராத்தே மாணவர்கள் பங்கேற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-12-25 01:26 GMT

விழிப்புணர்வு பேரணி 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கராத்தே மாணவர்கள் பங்கேற்ற போதை விழிப்புணர்வு பேரணி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் இளைய தலைமுறையே, வேண்டாம் போதை எனவும், மதுவை மறந்துவிடு, மனிதனாய் வாழ்ந்து விடு எனவும், போதையில் பயணம், பாதையில் மரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி அரசு தொழிற்பயிற்சி நிலையம், பேருந்து நிலையம், செந்துறை ரோடு வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு 500 கராத்தே மாணவர்களுக்கு கலர்பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரென்ஷி சங்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News