ஆட்சீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

Update: 2023-11-27 08:01 GMT
ஆட்சீஸ்வரர் கோவிலில்  தீப திருவிழா
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆட்சீஸ்வரர் திருக்கோயில் திருகார்த்திகை தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமயக் குறவர்கள் நால்வரால் பாடல் பெற்றதுமான அச்சிறுபாக்கத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக் கோயிலில் கார்த்திகை தீப பெருவிழாவையொட்டி நேற்று காலை 10:30 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6:00 மணிக்கு கோயிலில் பஞ்ச தீபங்களை சுமந்தபடி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பின்னர் கோயிலின் அனைத்து கோபுரங்களிலும் மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. கோயிலின் எதிரில் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்வும் நடைபெற்றன.அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.



Tags:    

Similar News