கலைஞர் நூற்றாண்டு விழா

முதுகுளத்தூரில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய்துறை சார்பில் பொது மக்களுக்கு இ பட்டா வழங்கப்பட்டன.

Update: 2023-12-14 13:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிட மேலாளமைத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு இ பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் தலைமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டத்தில் 308 பயனாளிகளுக்கும், கடலாடி வட்டத்தில் 318 பயனாளிகளுக்கும்,கழுதி வட்டத்தில் 326 பயனாளிகளுக்கும், பரமக்குடி வட்டத்தில் 333 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1285 பயனாளிகளுக்கு இ பட்டா பெற்று பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி ஆட்சியர் அப்தாப் ரசூல், முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் , கமுதி வட்டாட்சியர் சேதுராமன் கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜன் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் சடையாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News