காட்பாடி: மணல் கடத்திய 2 பேர் கைது!

காட்பாடி அருகே பாலாற்றில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-04-14 11:11 GMT

காவல்துறை விசாரணை


வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பழைய காட்பாடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கால்நடை மருத்துவமனை வழியாக வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த நித்தியகுமார் (37) மற்றும் அருண் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து, ஒரு யூனிட் மணலுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News