விழப்பள்ளம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவடி வீதியுலா

தை கிருத்திகையை முன்னிட்டு விழப்பள்ளம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவடி வீதியுலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-01-20 07:01 GMT

வீதியுலா 

கடலூர் மாவட்டம் ,குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள தவத்திரு சுப்புராயர் திருக்கோயில் என வழங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று தை மாத கிருத்திகையை முன்னிட்டு காவடி வீதியுலா காட்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News