ஓமலூரில் பணத்தை திருட முயன்ற கேரள இளைஞருக்கு சிறை

ஓமலூரில் பணத்தை திருட முயன்ற கேரள இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Update: 2024-02-27 14:15 GMT

கைதான வாலிபர் 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்த சம்பத் இவரும் அவரது மனைவி மேகலாவும் அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணம் 1200 ரூபாயை ஜன்னல் வழியாக யாரோ மர்ம நபர் ஒருவர் எடுத்துள்ளார். அப்போது அவரது மனைவி கூச்சலிட்ட நிலையில் மர்ம நபர் பணத்தை அங்கே வீசிவிட்டு தப்பி ஓடினார். பின்பு அவரை துரத்தி பிடித்து பொதுமக்கள் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், புதேன்கோடு தாலுக்கா மன்ச்மாலா அண்டூர்கோன பகுதியில் வசித்து வரும் ஹபிபுள்ளா ஷாஹித் மஞ்சில் என்பவருடைய மகன் ஆசிக் என்கிற முகமது அப்துல் ஹாதி என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து பணம் திருடிய குற்றத்திற்காக இளைஞர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News