ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகையுடன் இளம்பெண் கடத்தல் !

சாணார்பட்டி அருகே ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகையுடன் இளம்பெண் மாயமான நிலையில் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-22 06:26 GMT

கடத்தல்

சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த போதும்பொண்ணு மகள் பேச்சியம்மாள் (20). இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு கொடுக்க துவங்கினர். இதற்கிடையே உறவினர்கள் சிலர், நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு தான் உனது மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என போதும்பொண்ணுவை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகையுடன் பேச்சியம்மாள் மாயமானார். இதையடுத்து போதும்பொண்ணு தனது மகளை ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டதாக சாணார்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News