காரில் எடுத்துச் சென்ற கத்திகள் - தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் !
காரில் எடுத்துச் சென்ற கத்திகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 07:23 GMT
தேர்தல் பறக்கும் படை
லோக்சபா தேர்தலையொட்டி, செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், பறக்கும் படை அலுவலர் ராமமூர்த்தி மற்றும் குழுவினர், திருப்போரூர் கூட்டுச்சாலையில், நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த காரை மடக்கியபோது, ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காரை முழுதுமாக சோதனை செய்ததில், காரின் டிக்கியில் இரண்டு அடி நீளம் உள்ள இரண்டு கத்திகள் இருந்தது தெரிந்தது. காரை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.