பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீண்டும் காட்டுயானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.;

Update: 2024-06-02 01:53 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர், இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது, இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி இந்த பகுதிக்கு சென்று வருகின்றனர், குறிப்பாக மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பேரிஜம் ஏரி,மதி கெட்டான் சோலை,தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி வியூ உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.

Advertisement

இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி பேரிஜம் ஏரியில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகள் பார்வைக்கு தற்காலிகமாக தடை விதித்து இருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தாக தெரிவித்து கடந்த 28 ஆம் தேதி திறக்கப்பட்டது, அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் பேரிஜம் பகுதிக்கு சென்று கண்டு ரசித்து வந்த நிலையில் மீண்டும் பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாமிட்டதாக கூறி நேற்று  வனத்துறை அலுவலகத்தில் பேரிஜம் ஏரியை கண்டு ரசிக்க சுற்றுலாப்பயணிகள் உரிய அனுமதி சீட்டு பெற்று சென்றிருந்த நிலையில்,பேரிஜம் ஏரி நுழைவாயில் பகுதியில் பேரிஜம் பகுதியில் திடீரென காட்டு யானைகள் கூட்டம் முகாம் இட்டதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர், மேலும் யானைகள் நடமாட்டத்தினை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் யானைகள் கூட்டம் அடர்ந்த வனப் பகுதிக்கு அல்லது வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த பின் மீண்டும் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாவே பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாமிடுவதாக கூறி வனத்துறையினர் அவ்வப்போது சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News