கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-30 12:22 GMT

கோடாரி தடுப்பூசி 

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பிரசாந்த் முன்னிலையில் கால்நடை மருத் துவ குழுவினர் பசுக்கள், கிடேரிகன்றுகள், காளைகள் உள்பட 800-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப் பூசி செலுத்தினர். முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி பயன் அடைந்தனர்

Tags:    

Similar News