சிங்காரப்பேட்டையில் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்க பூமி பூஜை

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் டி. எம். தமிழ்செல்வம் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-26 14:35 GMT

சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. 

சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் டி. எம். தமிழ்செல்வம் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் அதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் நாராயணன், சிங்காரப்பேட்டை ஊராட்சிமன்ற தலைவர் அகமத் பாஷா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கலையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கி தந்த சட்டபேரவை உறுப்பினருக்கு பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News