இருளில் மூழ்கிய குளக்கரை சாலை; அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சின்னவேப்பங்குளக்கரை சாலையில், பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-04-15 09:55 GMT

 சின்னவேப்பங்குளக்கரை சாலையில், பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரை சாலையில், மாநகராட்சி சார்பில், தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இரு நாட்களாக இச்சாலையில் உள்ள தெரு மின் விளக்குகள் எரியாததால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.

இதனால், அப்பகுதியில் வசிப்போரும், இச்சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், சாலையோரம் உள்ள சின்னவேப்பங்குளத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சின்னவேப்பங்குளக்கரை சாலையில், பழுதடைந்துள்ள தெரு மின் விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது."

Tags:    

Similar News