குமாரபாளையம் : சி.பி.எம் சார்பில் தமிழ் வளர்ச்சி தின கருத்தரங்கம்

Update: 2023-11-05 08:23 GMT

தமிழ் வளர்ச்சி தின கருத்தரங்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கட்சி அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி தின கருத்தரங்கம்  நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:தமிழ்நாடு உருவான நவ.1ம் தேதியை  தமிழ்நாடு தினமாக தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று சி.பி.எம். வலியுறுத்தி வந்தது.  1956-ம் ஆண்டு நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனடிப்படையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உதயமாகின. அன்றைய சென்னை மாகாணமாகிய தமிழ்நாடு பல பகுதிகளைப் பறிகொடுத்தது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1-ந் தேதியை மாநிலங்கள் உருவாகிய நாளாகக் கொண்டாடுகின்றன.அண்மை காலமாக நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்கிற குரல் வலுத்து வந்தது. சி.பி.எம். இதற்கு குரல் கொடுத்தது. இவ்வாறு அவர் பேசினார். இதில் நிர்வாகிகள் சண்முகம், கந்தசாமி, மாதேஸ்வரன், வெங்கடேசன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News