செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

மேல்கல்லுபாளையம் கிராமத்தில் நேற்று செல்வமுத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிசேகவிழா கோலாகலமாக நடந்தது.

Update: 2023-10-28 08:28 GMT

செல்வமுத்து மாரியம்மன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்கல்லுபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டபட்டுள்ள செல்வமுத்து மாரியம்மன், மதுரைவீரன், ஓம்காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நேற்று கும்பாபிசேகவிழா நடந்ததையொட்டி, நேற்று முன்தினம் காலை 6மணிமுதல் இரவு 8 மணிவரையில் மங்களஇசை, நவகிரஹஹோமம், தீபாராதனை, கணபதிவழிபாடு, யாகசாலை பிரவேசம், முதல்காலயாக வேள்வி, சுவாமிகள் பீடத்தில் வைத்து எந்திரம், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது. நேற்று காலை 5மணிக்கு சுவாமிகளுக்கு காப்புகட்டுதல், இரண்டாம்கால யாகவேள்வி, கடம்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து, நேற்று காலை 9.30மணிக்கு கோபுரகலசங்களுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித தீர்த்தம்ஊற்றி மகாகும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News