ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கீழசண்முகபுரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி விநாயகா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-24 06:07 GMT

கும்பாபிஷேகம் 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி, கீழசண்முகபுரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி விநாயகா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின.

பின்னா், பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், பூா்ணாஹுதி, மாலையில் தீா்த்தவாரி பவனி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

Tags:    

Similar News