கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Update: 2024-02-24 12:03 GMT

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம்,சூணாம்பேடு அருகே வில்லிப்பாக்கம் கிராமத்தில் குளக்கரை பகுதியில். புதிய கெங்கையம்மன் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்கள் திருப்பணி மேற்கொண்டனர். தற்போது, திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, யாகசாலை பூஜைகள் கடந்த 20ம் தேதி துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9: 50 மணிக்கு கெங்கையம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10: 00 மணிக்கு மூலவருக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடந்தது. இதை தொடர்ந்து, கெங்கையம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், வில்லிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Tags:    

Similar News