கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 13:02 GMT

அரசு கல்லூரி

அரசினர் கலைக் கல்லூரி கும்பகோணத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இள்நிலை மாணவர் சேர்க்கைக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28 வரை  நடைபெறுகிறது.

ஜூன் 26, 2024 புதன் அன்று 239-லிருந்து 221 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்று இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஜூன் 27, 2024 வியாழன் அன்று 220-லிருந்து 200 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்று இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம். ஜூன் 28, 2024 வெள்ளி அன்று இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் பயில முறையே தமிழ் பாடத்தில் 69-லிருந்து 50 வரை பெற்றவர்களும்,

ஆங்கிலப் பாடத்தில் 59-லிருந்து 40 வரை பெற்று (சுழற்சி இரண்டு உட்பட) இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News