முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை மலர் தூவி வரவேற்ற கு.பிச்சாண்டி

Update: 2023-12-03 07:24 GMT

முத்தமிழ் தேர் ஊர்திக்கு வரவேற்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞரின்  பன்முகத்தன்மையை விளக்கும் வகையில் பேனா வடிவிலான முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த "முத்தமிழ் தேர்” அலங்கார ஊர்தியினை செங்கம் பக்கிரிபாளையம், திருவண்ணாமலை கலைஞர் கலை கல்லூரி மற்றும் அருணை பொறியியல் கல்லூரி அருகில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி  மலர் தூவி வரவேற்றார்.

கலைஞரின்  நூற்றாண்டு விழாவை போற்றும் விதமாக அனைத்து மக்களும் ஒரு நிலையான பங்களிப்பை வழங்க வேண்டுமென்ற உன்னத நோக்கதோடு இவ்விழாவை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் எழுத்தாளர் குழு, சரித்திரத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த  கலைஞர், தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்றைய தலைமுறை உணரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையை எடுத்து கூறும் வகையில் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

 செங்கம் பக்கிரிபாளையம், கருணாநிதி அரசு கலை கல்லூரி,தென்மாத்தூர் அருணை பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியானது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள், ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள், இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைவரும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி மற்றும் கலைஞர் திருவுருவச்சிலையினை கண்டுகளித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு எழுதுகோல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மாநில தடகள சங்க துணைத் தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைமணி கலைவானி, செங்கம் ஒன்றியக்குழுத் தலைவர் விஜயராணி குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செந்தில் குமார், சகுந்தலா ராமஜெயம், நகர்மன்ற துணைத்தலைவர் ராஜாங்கம், செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News