குற்றாலம் : சொட்டும் நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குற்றாலம் அருவியில் நீர் வரத்து குறைவாக இருந்தாலும் அருவியில் சொட்டும் நீரில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

Update: 2024-04-07 02:16 GMT

குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் குற்றாலம் அமைந்துள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக குற்றால மெயின் அருவியில் சொட்டு நீர் போல விழுந்து வரும் அருவி நீரில் சுற்றுலாப் பயணிகள் தரையில் அமர்ந்து சொட்டு நீரில் குளித்து செல்கின்றனர். இதில் சில மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News