மனைவியை பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது

குடியாத்தம் அருகே மனைவி முகத்தில் பாட்டிலால் குத்திய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-27 15:20 GMT

கைது

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நடுப்பேட்டை போடாசலமய்யா தெருவை சேர்ந்தவர் பெயிண்டு அடிக்கும் தொழிலாளி ரமேஷ் (32). இவரது மனைவி உண்ணாமலை (28), பீடி தொழிலாளி. ரமேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாமலை குடியாத்தம் கோபாலபுரம் செக்குமேடு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலையில் ரமேஷ் தனது மனைவி உண்ணாமலையை தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகே இருந்த பாட்டிலால் மனைவி உண்ணாமலை முகத்தில் குத்தி உள்ளார்.

இதில் காயமடைந்த அவர் குடியாத்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News