கூலித் தொழிலாளியை தாக்கி செல்போன் மற்றும் பணம்‌ பறிப்பு

காங்கேயம் அருகே வாய்க்கால் பகுதியில் மர்ம நபர்கள் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-03-09 03:46 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கயம் திருப்பூர் ரோடு ஏசி நகர் அடுத்த திருச்செந்தில் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் வயது 46. இவரது மனைவி சாரதா. இவர்கள் இருவரும் கட்டட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பிரசாந்த் வயது 25 என்ற மகன் உள்ளார்.

இவர் காங்கயத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவு‌ சுமார் 8 மணி அளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திருப்பூர் சாலை வாய்க்கால் மேடு பகுதியில் சில மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை தருமாறு மிரட்டியுள்ளனர்.

Advertisement

இதனை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரசாந்தை கத்தியின்‌ பின்புறத்தால் முதுகில் அடித்தும் தோல்பட்டையில் கீரியும், மோட்டார் பைக்கை உடைத்தும் வலிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.‌ இதனை அடுத்து நேற்று காலை அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய சில நபர்களை விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்ட பாண்டி மற்றும் யுவராஜ் என்பதும் இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பிரசாந்தின் வீட்டருகே வாடகை வீட்டில் இரண்டு பெண்களுடன் இரண்டு மாதங்களாக தங்கியிருந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பொதுமக்களிடம் யுவராஜ் என்பவர் தப்பித்து ஓடிவிட்டதால், பாண்டி வயது 27 என்பவரையும், உடன் இருந்த இரண்டு‌ பெண்களையும் காங்கயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்‌. இதனை அடுத்து காங்கயம் போலிஷார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News