தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி

குமாரபாளையம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-12-08 11:34 GMT

குமாரபாளையம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாமியம்பாளையம் பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை, 47. மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி ராணி, 44. இவர்களது மகன் ரஞ்சித்குமார், 23, டிப்ளோம படித்து விட்டு மில்லில் வேலை செய்து வருவதாகவும், இவரது மகள் நவீனா, 14, கொடுமுடியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை 11:00 மணியளவில், காந்திநகரில் உள்ள ஒருவரின் தென்னை மரத்தில், செறை எடுக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து கீழே தவறி விழுந்தார். அப்போது தலையில் பலத்த அடிபட்டதால், இவரை சிகிச்சைக்காக பவானி ஜி.ஹெச்.க்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்ததாக கூறினார். இது குறித்து ராணி கொடுத்த புகாரின்படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News