சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலி !

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் மீது செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2024-04-26 05:25 GMT

கூலித் தொழிலாளி

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் மீது செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி உடலை மீட்டு போச்சம்பள்ளி போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மேட்டுசூளகரை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் மேகநாதன் (28) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பரான ராஜா என்பவரது மகன் அஜித்குமார் (26) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் போச்சம்பள்ளி நோக்கி வந்துக்கொண்டிருந்த போது, பர்கூர் @ போச்சம்பள்ளி சிப்காட் அருகே உள்ள ஆலமரம் பேருந்து நிலையம் அருகே செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் மீது மோதியதில் மேகநாதன் சம்பவ இடத்தலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த அஜித்குமார் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுனர் தப்பியோடி தலைமறைவான நிலையில் டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News