திருவிளக்கு பூஜை

பொன்னேரி திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் 43ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-12-30 07:11 GMT

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. 43-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு திருவேங்கடாபுரத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் விழா தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி சுவாமியே சரணம் ஐயப்பா என சரண முழக்கம் எழுப்பியவாறு ஊா்வலமாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் வரை சென்றனா். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

திருவிளக்கு பூஜையையொட்டி வாண வேடிக்கைகள், கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் ஆகியவை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் திருவேங்கடாபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News