கனமழையால் நீரில் மூழ்கிய தரைப்பாலம் - மலையோர கிராமங்கள் துண்டிப்பு

குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் மோதிரமலை - குற்றியார் தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மலையோர கிராமங்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-06-28 02:18 GMT

நீரில் மூழ்கிய மோதிரமலை - குற்றியார் தரைப்பாலம் 

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில், பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராங்களுக்கு செல்ல கோதையார் அருகே உள்ள குற்றியார் தரைப்பாலம் மட்டுமே உள்ளது. இந்த வழியாக மட்டுமே அரசு பேருந்துகளிலும், தனியார் வாகனங்களிலும், நடந்தும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் ஊரை விட்டு நகரங்களுக்கு செல்ல முடியும்.இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதாலும், கோதையார் நீர் மின் நிலையத்தில் இருந்து நீர் வெளியேற்றும் நேரத்திலும் இந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் கிராமங்களுக்கு உள்ளேயே முடங்கியும், வெளியே சென்ற மக்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதும் வழக்கம்.இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க மலை வாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் அங்கு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மோதிரமலை, மாங்கா மலை, விளா மலை, குற்றியார், கல்லார், முடவன்பொற்ற, தச்சமலை உட்பட பல்வேறு மலையோர கிராமங்கில் உள்ள மலைவாழ் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News