புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு வங்கி திட்டத்தின்கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வு கூடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

Update: 2024-01-04 17:03 GMT

வகுப்பறைகள் திறப்பு 

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை, அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு வங்கி திட்டத்தின்கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆறு வகுப்பறை மற்றும் இரண்டு அறிவியல் ஆய்வகக் கட்டிடங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று திறந்து வைத்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News