நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வக்கீல் பலி!

ஜோதிபுரம் பகுதியில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வக்கீல் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-26 15:15 GMT
பைல் படம்


அரக்கோணத்தை சேர்ந்த வக்கீல்கள் ரவிச்சந்திரன், சண்முகம். இவர்கள் அரக்கோணத்திலிருந்து சோளிங்கர் கோர்ட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் ரோட்டில் ஜோதிபுரம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், அங்கு நின்று கொண்டு இருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.

இதில் வக்கீல் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த வழக்கறிஞர் சண்முகம் பலத்த காயமடைந்தார். அந்த பகுதி பொதுமக்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News