நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு  வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்....

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-06 05:58 GMT
ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வக்கீல் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், வக்கீல்கள் வழக்குகளை இ- பைலிங் முறையில் தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்  சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஆதிலிங்கம், துணைச் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்  கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News