சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில், பெரம்பலூர் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

Update: 2023-10-27 08:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி பொறுப்பில் உள்ள தனசேகரன் ஆலோசனைப்படியும் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பெரம்பலூர் கிளை சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியும் ஆகிய சந்திரசேகர் சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். பிணையில் எடுப்பதற்கும், வழக்கு நடத்துவதற்கும் தாங்கள் சட்ட உதவி மையத்தை நாடலாம் என்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும் உரிய சட்ட வழிமுறைகளை எடுத்துரைத்தார். மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் மூலம் கிளைச்சிறைக்கு வரும் சட்டபணிகள் குழு வழக்கறிஞர்களிடம் தங்களுக்கு உரிய பிரச்சனைகளை எடுத்துரைத்து ஆலோசனை பெற்று கொள்ளலாம் என்றும் வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சட்ட உதவி மையத்தை நாடலாம் என்றும் தெளிவாக எடுத்துரைத்தார். இம்முகாமில் கிளைசிறையின் கண்காணிப்பாளர் சிவா மற்றும் சட்டபணிகள் ஆணை குழுவின் வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, சங்கர் மற்றும் திருஞானம் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தனர், இம்முகாமில் 22 சிறைவாசிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் சட்ட உதவி கோரிய மனுக்கள் பெறப்பட்டது.

Tags:    

Similar News