கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கும் விழா!
பழனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Update: 2024-03-05 09:39 GMT
பழனியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பழனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு 22கோடியே 60லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏழை எளிய மக்களுக்காக கடன் வழங்கி அவர்கள் வாழ்வில் பொருளாதார வசதி பெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். பொதுமக்கள் திமுக அரசுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.