சிறுத்தை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை

கோத்தகிரி அருகே சிறுத்தை கால்கள் வெட்டப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் 3 தனி குழு அமைத்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Update: 2023-12-20 12:51 GMT

 கோத்தகிரி அருகே சிறுத்தை கால்கள் வெட்டப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் 3 தனி குழு அமைத்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ் தட்டபள்ளம் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த சனிக்கிழமை சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் சிறுத்தை உயிரிழந்தது. இறந்த சிறுத்தையின் 3 கால்களும் வெட்டி எடுத்து செல்லபட்டதால் நகத்திற்காக வேட்டையாடபட்டதா? என கீழ் கோத்தகிரி வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நீலகிரி கோட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவு படி வனச்சரகர் தலைமையில் மேலும் 3 தனி குழுகள் அமைத்து தொடர்ந்து கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News